தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர் உள்பட மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர் உள்பட மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, முதற்கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
• ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்
• ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
• மே 2 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம்
• மே 19ல் வாக்குப் பதிவு
• மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.