கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படத்தை கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி வெளியிட்டார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படத்தை கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி வெளியிட்டார்.
வரும் 18-ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படத்தை கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன் உள்பட பல்வேறு கலந்து கொண்டனர்.