பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 90.5 சவரன் நகைகளை மீட்ட கோவை மாவட்ட போலீசார்

கோவை : கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 90.5 சவரன் நகைகளையும், திருடர்களையும் கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.


கோவை : கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 90.5 சவரன் நகைகளையும், திருடர்களையும் கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர். 

கடந்த 3-ம் தேதி ஜி.என். மில்ஸ் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி, பீரோவில் இருந்த 33.5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல, 7-ம் தேதி கவுண்டம்பாளையம், டிவிஎஸ் ரோடு பகுதியில் ஷிபா என்பவர் மளிகைக் கடைக்கு சென்று விட்டு திரும்பி வருகையில், மத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் நகையை பறித்துச் சென்றனர். 

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். பல்வேறு ஆதாரங்களை வைத்து தேடியதில், கடந்த 7-ம் தேதி உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் அருகே பாலமுருகன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்தொடர்ச்சியாக, 8-ம் தேதி அண்ணாநகர் சோதனை சாவடியில், தங்கராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். 

மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது துடியலூர், ஒத்தக்கடை மற்றும் அபிராமபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. 

கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொடூரமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, களவு சொத்தான 90.5 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ள கோவை மாவட்ட போலீசாரை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...