தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை : ரஜினிகாந்த்

சென்னை : யாருக்கும் ஆதரவில்லை என்ற தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


சென்னை : யாருக்கும் ஆதரவில்லை என்ற தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உரிய நேரத்தில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார். ஆனால், இவருக்குப் பின் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சக நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கிவிட்டார். 

இந்த நிலையில், போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மக்களவை தேர்தலில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். கமலுக்கும், தனக்கும் இடையிலான நட்பை சீர்குலைத்துவிட வேண்டாம். தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 

இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைத்துவிட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலில் நதிகளை இணைக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...