திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரம்

திருப்பூர் : திருப்பூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர் : திருப்பூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குழுவுக்கு 4 பேர் வீதம் 60 குழுக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடிகளுக்கு, 20 சதவீத கூடுதல் இயந்திரங்களுடன் 434 இயந்திரங்களிலும், திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 233 வாக்கு சாவடிகளுக்கு 44 கூடுதல் இயந்திரங்களுடன் 279 இயந்திரங்களிலும் வேட்பாளர் பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தப்பட்டு தயார்படுத்தும் பணிகள் அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 



இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், நினைவகம், ஒப்புகை சீட்டு இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, முதல் வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கே முடிவடைந்தது. இயந்திரங்கள் பொருத்தும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.  இன்று மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில், நாளையும் இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...