மக்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தவே சம்பந்தப்பட்ட கண்டெய்னரில் ஆய்வு : கோவை ஆட்சியர் பேட்டி

கோவை : சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக மக்களுக்கு எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவே, சம்பந்தப்பட்ட கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.


கோவை : சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக மக்களுக்கு எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவே, சம்பந்தப்பட்ட கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் நியாமான முறையில் தேர்தல் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 கோடியே 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 153 கிலோ தங்கம் பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு உக்கடம் பகுதியில் பணம் கொண்டு செல்வதாகத் தகவல் கிடைத்தது. வாகனம் சோதனையின் போது டீத்தூள் இருப்பது தெரியவந்தது. வருமான வரி, சுங்க வரித்துறை, ஜி.எஸ்.டி. வருமான வரித்துறை அதிகாரிகள் என அனைவர் முன்னிலையிலும் ஆய்வு செய்யப்பட்டது

கண்டெய்னர் லாரியில் தவறான நடவடிக்கைகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் லாரி விடுவிக்கப்படும். இரவு 11 மணிக்கு மக்கள் சந்தேகம் தெரிவித்ததால், வாகனம் ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு சந்தேகம் முழுமையாகத் தெளிவுபடுத்தவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பொதுமக்கள், வணிகர்களின் உடைமைகளை ஆய்வு செய்யும் போது, மக்களை துன்புறுத்தக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...