பிரதமர் மோடி இன்று கோவை வருகை : துப்பாக்கிகளுடன் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரிடம் போலீசார் விசாரணை

கோவை : பிரதமர் மோடி இன்று கோவை வர உள்ள் நிலையில், பீளமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் தங்கி இருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர்.


கோவை : பிரதமர் மோடி இன்று கோவை வர உள்ள் நிலையில், பீளமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் தங்கி இருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதையொட்டி, கோவை மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விமான நிலையத்தில் துவங்கி கொடிசியா, பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக, ஆங்காங்கே சோதனைகள் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், பீளமேடு ஜி.கே.டி. நகரில் உள்ள ஆர்.வி.ஆர் லாட்ஜில் நேற்று இரவு நேரத்தில் நடந்த சோதனையின்போது, இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் விசாரணை செய்ததில், அவர் பெயர் தரணிதரன் என்பதும், முன்னாள் சி.ஆர்.பி.எப்

வீரரான அவர், தற்போது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வர் வைத்திருந்தார். அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகள் உரிமம் பெற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணை செய்த போலீசார் துப்பாக்கிகளை ஒப்படைத்து அனுப்பிவிட்டனர். 

பிரதமர் இன்று மாலை கோவை வரும் நிலையில், துப்பாக்கியுடன் நபர் ஒருவர் விடுதியில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...