கோவை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் 1998-ம் ஆண்டு பெரியார் சிலை நிறுவப்பட்டது. இந்தப் பெரியார் சிலையானது, இன்று தலைப்பகுதி உடைக்கப்பட்டு சாலையில் கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திராவிட கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் அந்தப் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் காந்திபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சூலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அறிவிக்கப்பட்ட உடன் அனைத்து சிலைகளும் மற்றும் அரசியல் அடையாளங்கள் மூடப்பட்டது. இதில், மூடப்பட்ட பெரியார் சிலைகள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, மூடப்பட்ட சிலைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது உடைக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.