பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேரின் காவல் 22-ம் தேதி வரை நீட்டிப்பு

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் திருநாவுக்கரசை தவிர்த்து மற்ற 3 பேரின் காவலை 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் திருநாவுக்கரசை தவிர்த்து மற்ற 3 பேரின் காவலை 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகிய 3 பேர் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மூவருக்கும் 22-ம் தேதி காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல, பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதாகியுள்ள மணிவண்ணன் என்பவரின் நீதிமன்ற காவலையும் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...