கோவை : கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை : கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி சங்கனூர் பகுதியில் இன்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் நடத்திய மனிதசங்கிலி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி கலந்து கொண்டார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் சிவக்குமார், ரூட்ஸ் நிறுவன குழும தலைவர் ராமசாமி, ரூட்ஸ் நிறுவன மேலாளர் கவிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.