பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கு : குற்றவாளிக்கு 15 நாட்கள் காவல் விதித்து சிறையிலடைப்பு

கோவை : பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 6-ம் தேதி கோவை ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவி, மர்மமான முறையில் பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவின் உத்தரவுபடியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலும், கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி மாடசாமி மற்றும் டி.எஸ்.பி.க்கள் சிவகுமார், பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இதனிடையே, மாணவியின் உறவுக்காரரான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'ஏற்கனவே எனக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தன்னுடன்தான் வாழுவேன் என அழுத்தம் கொடுத்ததால், திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சதீஷ் குமாரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...