தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருகை : பாதுகாப்பு பணிக்காக 2,000 போலீசார் குவிப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் என 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் என 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கொடிசியாவில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக, இவர் நாளை மாலை தனி விமானம் மூலம் 6.30 மணியளவில் கோவை விமான நிலையம் வருகிறார். இதையடுத்து, விமானநிலையத்தில் இருந்து கொடிசியா செல்லும் அவர், 6.45-க்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர், இரவு 08.15 மணிக்கு தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் கோவை வந்தனர். இவர்கள் விமானநிலையம், பொதுக்கூட்டம் நடக்க உள்ள கொடிசியா மைதானம் என அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

அதேபோல, தமிழக காவல்துறை சார்பில் பிரதமர் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு டி.ஜி.பி., ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி., 4 ஏ.டி.எஸ்.பி., 5 எஸ்.பி., 10 டி.எஸ்.பி., மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் மாநகர போலீசார் 1,000 பேர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த போலீசார் 1,000 பேர் என மொத்தம் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...