கோவை : சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரவேற்பதாக சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை : சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரவேற்பதாக சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜன் கோவை சவுரிபாளையம் பேருந்து நிலையம் அருகில் 13 அம்ச தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். இந்நிகழ்வில் பங்கேற்ற சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- விவசாயம் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், 8 வழிச்சாலையை அமலாக்கக் கூடிய அரசாணையை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரவேற்கிறோம், என தெரிவித்தார்.