சென்னை : சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை : சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்டங்களை சேர்ந்த விவாசாயிகள் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விசாரித்தது. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசு, விசாரணையின் போது உறுதி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.