பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் : நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை

நீலகிரி : பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.



நீலகிரி : பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.



நீலகிரி மாவட்டம் குன்னூரில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் கூறும்போது, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்தால் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி வந்துவிடும். மேலும், அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்து உள்ளது. பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நீலகிரியில் இயங்கி வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடியது போல், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அருமவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை காப்பாற்றப்படும், எனக் கூறினார்.



முன்னதாக, அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குன்னூரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாகனத்தில் அவர் பரப்புரையை மேற்கொண்டார்.



இதனைத் தொடர்ந்து குன்னூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, மத்தியில் மதசார்பற்ற கூட்டணியை அமைக்க வேண்டும். நாட்டில் ஜனநாயக ஆட்சிக்கு பதில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. மேலும், மத்தியில் ஆண்ட ஆட்சி மக்கள் நலனில் அக்கரை கொள்ளாமல் கார்பரேட் நலனில் அக்கறை கொள்கிறது. நாட்டில் ஜனநாயகம் செழிக்க மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...