கோவை : பாரதிய ஜனதா கட்சியின் 39-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் நிறுவனர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை : பாரதிய ஜனதா கட்சியின் 39-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் நிறுவனர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் 39-வது ஆண்டு நிறுவன தினம் கோவையில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அக்கட்சியின் நிறுவனர்களான ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோவை மாவட்டத் தலைவர் சி.ஆர். நந்தக்குமார் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.