கோவை : ஏமன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் தொடர்ந்து 10 மணி நேரம் நுண்ணிய துளை அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவை : ஏமன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் தொடர்ந்து 10 மணி நேரம் நுண்ணிய துளை அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஏமன் நாட்டை சேர்ந்த 17 வயது இளம்பெண் தவறுதலாக ஆசிட்டை குடித்துள்ளார். இதனால், அவரது உணவுக்குழாய் மற்றும் குடல் உட்பட வயிற்றுப்பகுதி உடல் உறுப்புக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு ஏமன் நாட்டில் பல்வேறு சிகிச்சைகள் செய்து பலனளிக்காமல் தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இளம் பெண் 2 மாதமாக மருத்துவர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து 10 மணி நேரம் அவருக்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் வெற்றிகரமாக நுண்துளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.