பா.ஜ.க., வேட்பாளரை ஆதரித்து கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம்

கோவை : மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள கூட்டணி கட்சியின் வேட்பாளரான பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார்.


கோவை : மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள கூட்டணி கட்சியின் வேட்பாளரான பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார். 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் கோவை தொகுதியில் முகாமிட்டு, அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார். 

திண்டுக்கல்லில் நாளை பிரச்சாரத்தை தொடங்கும் அவர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, மாலை கோவையில் பிரச்சாரம் செய்கிறார். கோவையில், குறிச்சி, சுந்தராபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் பொள்ளாச்சி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர், உக்கடம் பகுதியில் கோவை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். 

இதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் எம். தியாகராஜன் மற்றும் திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...