மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் சேவை இன்று முதல் உதகை வரை நீட்டிப்பு : சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் சேவை இன்று முதல் உதகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் சேவை இன்று முதல் உதகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10 மணிக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலைரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி துவக்கப்பட்டது. 

இந்த சிறப்பு மலைரயில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும். இந்த சிறப்பு மலைரயில் குன்னூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், உதகை செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் குன்னூரில் மாற்று வாகனம் மூலம் உதகை செல்ல வேண்டியிருந்தது. 

இதனால், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலை போன்றே கோடை கால சிறப்பு மலை ரயிலையும் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இதனை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் இன்று முதல் சிறப்பு மலை ரயிலின் சேவையினை உதகை வரை நீட்டித்துள்ளது. இதனால், இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரயில் உதகை வரை இயக்கப்படவுள்ளது. 

இந்த கோடைகால மலை ரயில் சேவைக்காக சென்னை பெரம்பலூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட ஐந்து புதிய நவீன ரக ரயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, மலை ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளன. 132 இருக்கைகள் கொண்ட இந்த சிறப்பு மலைரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இம்மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்த கூடுதல் ரயில் சேவை உதகை வரை நீட்டிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதிய வசதிகளுடன் நீலகிரியின் இயற்கை எழிலை முழுமையாக கண்டு ரசிக்கும் படியான ரயில் பெட்டிகளில் பயணிப்பது சுற்றுலா பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...