நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்த ஒற்றை காட்டு, அங்குள்ள கோவிலின் நுழைவு கதவை உடைத்தெறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்த ஒற்றை காட்டு, அங்குள்ள கோவிலின் நுழைவு கதவை உடைத்தெறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மஞ்சூர் அருகே உள்ள கரிய மலைப் பகுதியில் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் முற்றுகையிட்டிருந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றது. இதன் காரணமாக, தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். பிறகு, இந்த காட்டு யானை அங்கிருந்த கரிய மலை சிவன்கோவில் வளாகத்திற்கு சென்று அங்கிருந்தகேட்டை உடைத்து விட்டு,
கெத்தை கிராமத்திற்கு சென்றது.
இந்த நிலையில், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த ஒற்றை காட்டு யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.