கோவை : பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் உறுதிமொழி மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை : பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் உறுதிமொழி மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவ மாணவிகளால் நடத்தப்பட்ட நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் என்.ஜெயக்குமார், திருநாவுக்கரசு, பதிவாளர் (பொ) பேராசிரியர் முருகன், பேராசிரியர் ஆர்.விமலா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.