Exclusive : கோவை மக்களவை தொகுதியில் 148 பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி

கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் 148 பிரச்சார வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் 148 பிரச்சார வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அ.ம.மு.க. உள்பட 8 வேட்பாளர்கள் சுயேட்சைகள் ஆவர். கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியும் கோவை மக்களவை தொகுதிக்குள் வருகிறது.

இதனிடையே, வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யப்படும் வாகனங்களுக்கு முறையாக அனுமதி வாங்கப்பட வேண்டும். இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றைசாளர முறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மக்களவை தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய 148 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "148 வாகனங்களுக்குக் கோவை மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சான்றிதழை வாகனங்களின் முன் பகுதியில் அனைவருக்கும் தெரியும்படி ஒட்டி வைக்கப்பட வேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் இருப்பின் அனுமதி சான்றிதழை அவர் சோதனை செய்வார்கள். அனுமதி வாங்காமல் வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், தேர்தல் விதிமுறை மீறல்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...