கோவை : லைட் பெயிண்டிங் புகைப்படத்தை உருவாக்கியதற்காக கோவையைச் சேர்ந்த மாணவனுக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.
கோவை : லைட் பெயிண்டிங் புகைப்படத்தை உருவாக்கியதற்காக கோவையைச் சேர்ந்த மாணவனுக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.
சி.எஸ்.ஐ. பிஷப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேசன் துறையில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் ஐ. ஸ்ரீதர் முத்துகிருஷ்ணன். இவர் தனது சகோதரர் சுரேஷ் நாராயணனின் உதவியுடன் லைட் பெயிண்டிங் புகைப்படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவரது புகைப்படம் கடந்த 13-ம் தேதி கின்னஸ் சாதனை சான்றளிக்கும் குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை கோவையின் பிஷப் திமோதி ரவீந்தரிடம் இருந்து மாணவன் ஸ்ரீதர் முத்துகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.