குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை வடிவமைத்து அசத்திய கோவை நகை பட்டறை தொழிலாளி

கோவை : 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை கோவை நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.


கோவை : 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை கோவை நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார். 

17-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக, இந்தியா முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, குண்டு பல்ப்பின் உள் இழையில் மனித உருவம் போல் ஒரு சிற்பத்தை உருவாக்கி, அதன் இரு கைகளில் 100% வாக்களிப்போம் என்பதை வெளிக்காட்டும் விதமாக வடிவமைத்து உள்ளார். இதன் கீழே vote என்ற ஆங்கில எழுத்தும், தேர்தல் தேதியையும் உருவாக்கி உள்ளார். மற்றொரு பல்ப்பில் நாடு ஒளிர 100 % வாக்களிப்போம் என்ற வாசகமும் தேர்தல் தேதியை பதிவிட்டு உள்ளார்.

இதனை உருவாக்க 2 நாட்கள் ஆனதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இந்த படைப்புகளை வைக்க அனுமதி கேட்டு உள்ளதாகவும் கூறிய யு.எம்.டி ராஜா, அனுமதி அளிக்கும் பட்சத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தக் காட்சிப்படுத்த இது வைக்கப்படும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...