பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் ஜனநாயகத்தை சீரழிக்கின்றன : ஸ்வராஜ் இந்தியா பார்ட்டியின் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டு

கோவை : நாட்டில் உள்ள ஜனநாயகத்தை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் சீரழித்து வருவதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.


கோவை : நாட்டில் உள்ள ஜனநாயகத்தை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் சீரழித்து வருவதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- நமது நாட்டை பாதுகாக்கவும், சாதி அடிப்படையிலான ஆதிக்கத்தை முறியடிக்க நமக்கு புதிய சிந்தனைகளுடன் கூடிய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். இது நமது எதிர்கால இந்தியாவிற்கு முக்கியமானதாகும். தற்போது, புதிய சிந்தனைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்ட புதிய அரசியல் தலைவராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தென்படுகிறார். எனவே, எதிர்வரும் தேர்தலில் அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். என்றார். 



மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை மற்றும் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், கமல்ஹாசனுடன் இணைந்து திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். சேலம் - கோவை இடையே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தின் மூலம் சமூகத்திற்கு அடையாளம் காணப்பட்ட அவருக்கு, ஏராளமான விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதைத் தொடர்ந்து, ஸ்வராஜ் இந்தியா பார்ட்டியின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், "மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதால்தான்," என்றார். 

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- மக்கள் நீதி மய்யத்துடன் ஸ்வராஜ் இந்தியா பார்ட்டி இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என யோகேந்திர யாதவ் புதிய அரசியல் தலைவர்களை தேடி வந்தார். இந்த சூழலில், எங்களது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் அவரை கவர்ந்துள்ளது, என்றார். 

"மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் ஆரம்பத்தில் நல்ல கொள்கைகளுடன் திராவிடக் கட்சிகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது, முறையான கொள்கைகளும், திட்டங்களும் ஏதும் இல்லை," என்கிறார் யோகேந்திர யாதவ்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...