கோவை : கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் கோவை மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் கோவை மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கொள்ளுபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தேவி. இவர் பரமசிவன் (35) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். மேலும், தேவிக்கு முதல் திருமணம் ஆன பொழுது 9 வயது மகள் மூன்று வயது மகள் என இருவர் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்துள்ள பரமசிவம், தேவியின் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியரிடம் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான 1098 எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வளர்ப்புத் தந்தையான பரமன் என்கிற பரமசிவத்தின் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சிறுமியின் வளர்ப்புத் தந்தையை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.