புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பேத்தி : பதிவை நீக்க யூடியூபு-க்கு கடிதம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி, அவரது பேத்தி வெளியிட்டுள்ள வீடியோவை நீக்குமாறு யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி, அவரது பேத்தி வெளியிட்டுள்ள வீடியோவை நீக்குமாறு யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில், "நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன. அப்போது உங்கள் பிரச்சினைகளுக்கு இடையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே பாட்டி. இப்போது மட்டும் ஏன் பாட்டி வருகிறீர்கள்..?. போலீஸை வைத்து அப்பாவை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்..?. என்னை யாரும் கடத்தவில்லை. நான் அப்பாவுடன் சந்தோஷமாக இருக்கிறேன்,' என்று குறிப்பிட்டு தனது தந்தையைக் காட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து, மீண்டும் அறைக்குள் வந்த கிரண்பேடி பேத்தி, "எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்து பதிவிடுங்கள்" என்று குறிப்பிட்டு வீடியோவை நிறைவு செய்கிறார். இந்த வீடியோ புதுச்சேரியிலும், சமூக வலைதளங்களிலும் அதிகளவில் பரவி வருகிறது. 

இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "இது முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூடியூப்பில் அளித்து விட்டோம். குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசுகிறது. குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து கருத்துகள் கூறுவதோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது," என்று கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...