நீலகிரி : ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் நலத்திட்டங்களை கேட்கமுடியாது என்றும், அரசின் குறைகளை தட்டி கேட்க முடியாது எனவும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி : ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் நலத்திட்டங்களை கேட்கமுடியாது என்றும், அரசின் குறைகளை தட்டி கேட்க முடியாது எனவும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா வாக்குப்பதிவு குறித்த குறும்படம் மற்றும் டீ சர்ட்களை வெளியிட்டார். அந்த டி-ஷர்ட்களில் ‘ஓட்டுபோடுங்க பணம் வாங்காதீங்க’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பொது மக்கள் ஓட்டுக்காக பணம் பெறுவதை தவிர்க்க
வேண்டும். பணம் பெறுபவர்கள் அரசின் குறை சொல்லுவதற்கும், நலத்திட்டங்ளை கேட்பதற்கும் தகுதியற்றவர்கள்,” என கூறினார்.
மேலும், தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து அனைத்து கிராமப்புற மக்களிடையே சென்றடைய ஒலிம்பிக் விளக்கு ஏற்றப்பட்டது.