கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-வது கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-வது கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரேணுஜெய்பால் (கோவை) சுபீர்குமார் (பொள்ளாச்சி), அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. இராசாமணி தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் 2019க்காக மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக 2ம் கட்டமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையினை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி தெரிவித்ததாவது :- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 2-ம் கட்டமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையினை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட உள்ளது, என்றார்.