நீலகிரி: கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டிள்ளார்.
நீலகிரி: கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டிள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- தேர்தல் அறிவிக்கபட்ட உடன் தேர்தல் விதி அமலுக்கு வந்துவிடும். வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. ஆனால், அதனை வைத்து ஸ்டாலின் அனுதாபம் தேடுகிறார். அதேபோல, கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவது அவரது பலவீனத்தை காட்டுகிறது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதன்பின் நேரத்திற்கு ஏற்ப மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும், இவ்வாறு கூறினார்.