கோவையில் ஜி.எஸ்.டி.யால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு : கோவையில் வைகோ வேதனை

கோவை : கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகமா..?, பாசிச வெறியாட்டமா..? என்ற கேள்விற்கு விடை காணும் தேர்தலாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துத்துவா கூட்டம் என்ற எந்தவித வன்முறையும் செய்ததில்லை என்ற ஆபத்தான துருப்பு சீட்டை பிரதமர் மோடி வீசுகின்றார். இந்தியாவில் நடந்த வன்முறை செய்திகள் எதுவும் உங்கள் காதுகளை எட்டவில்லையா.. மோடி அவர்களே. ஓடாத திருவாரூர் தேரை 4 வீதிகளிலும் ஓட வைத்த பெருமைக்கு உரியவர் கலைஞர். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மாநகரமான கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

கோவையில் இயங்கி வந்த மத்திய அரசின் அச்சகம், கரும்பு ஆராய்ச்சி மையத்தை மூடியது நயவஞ்சக மோடி அரசு. நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே நடுங்குகின்ற எடப்பாடி அரசால், இவர்களை எதிர்க்க முடியுமா..?. இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு கம்பெனிகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. போர்ட், ஹோண்டா பைக் நிறுவனம், பிரான்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனம், கொரியாவின் நிறுவனம் என பல நிறுவனங்கள் கமிஷன் அதிகம் கேட்டதால், தொழில் துவங்க அவர்கள் தமிழகத்திற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு ஒடி விட்டார்கள். இதனால், ஏராளமான வேலைவாய்ப்பு பறிபோனது. 

விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை ரத்து செய்ய முடியாது என சொல்கின்றனர். நீங்கள் யார் ரத்து செய்ய, நாங்கள் செய்கின்றோம் என்று அறிவித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இந்த கருத்தை வழி மொழிந்தார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தி.மு.க. தேர்தல் அறிக்கையை போலவே இருக்கின்றது. தி.மு.க போட்டியிடும் 18 தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றியடையச் செய்ய வேண்டும். என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...