கோவை : தொழில் நகரமான கோவையில் நலிந்து கிடக்கும் தொழிலையும், தொழிலாளர்களையும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
கோவை : தொழில் நகரமான கோவையில் நலிந்து கிடக்கும் தொழிலையும், தொழிலாளர்களையும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்டு சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது :- கோவை தொழிலாளர்கள் நிறைந்த தொழில் நகரம். இன்றைக்கு தொழிலும், தொழிலாளர்களும் நசிந்த நிலையில் உள்ளனர். தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற எங்கள் கூட்டணியால் தான் முடியும். கோவையில், அ.தி.மு.க. ஆட்சி தண்ணீர் வழங்குகிற பணியை மாநகராட்சியை கொண்டு மேற்கொள்ளாமல், பிரான்ஸ் நிறுவனத்திடம் விற்று விட்டது. இங்கு மட்டுமல்ல, அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலும் தண்ணீர் விலைபேசி விற்கப்படுகிறது.
தண்ணீர் விநியோகத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து, அதிலும் கோடிகளில் ஊழல் செய்யும் ஊழல் ஆட்சியை அகற்றவும், மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கவும், மோடியையும் பாடியையும் வீட்டுக்கு அனுப்பவும், இந்த தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார்.