நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் ரூ. 1.76 கோடி விடுவிப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்

நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், ரூ. 1.76 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.


நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், ரூ. 1.76 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிக்காக 163 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் 18 பறக்கும் படையும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவும் மற்றும் 10 வீடியோ கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் உட்பட பல பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்திய நாளிலிருந்து நேற்றைய நிலவரப்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.86 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின், ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு ரூ. 1.76 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாகன சோதனையை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். இதுவரை நடந்த வாகன சோதனையில் அரசியல் கட்சிகளில் பணம் ஏதும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...