சிறுமுகையில் மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விவசாய தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் காட்டு யானை உயிரிழந்தது.


கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விவசாய தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் காட்டு யானை உயிரிழந்தது. 



சிறுமுகையில் பவானி ஆற்றங்கரை அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 10 முதல் 12 வயது மதிக்கத்தக்கக் காட்டு யானை ஒன்று விவசாய நிலத்தில் நுழைய முயற்சி செய்துள்ளது. அப்போது, மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 



இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், விவசாய நிலத்திற்கு சொந்தக்காரரான விவசாயி நாசர் அலியை உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், சோலார் சக்தி பேட்டரியில் மின்சார வேலிக்கு நேரடியாக மின் இணைப்பு கொடுத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், தொண்டு நிறுவனங்களின் முன்னிலையில், உயிரிழந்த காட்டு யானையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...