கோவை : கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு லட்ச ரூபாய் வழங்கி, ஆறுதல் கூறினார்.
கோவை : கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு லட்ச ரூபாய் வழங்கி, ஆறுதல் கூறினார்.

கோவை பன்னிமடையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சிறுமியின் பெற்றோரிடம் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் அந்தப்பகுதியில் உண்மை கண்டறியும் குழுவினரிடம் பேசி தகவல்களை சேகரித்து விட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம், கூட்டு பலாத்காரம் என்பதை மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், ஒருவர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவாளி அவரது பாட்டியையும் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். ஆனால், பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி செய்ய தயாராக உள்ளேன். மேலும், இந்த கொடூர சம்பவங்களால் இந்த ஆட்சியின் கீழ் வாழ வெட்கப்படுகிறேன், என தெரிவித்தார்.