வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை : தேர்தல் அதிகாரியிடம் முறையீடு

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். 

கோவை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கல்யாணசுந்தரம் மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராசாமணியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை எனவும், அதனை தெளிவாக தெரியும்படி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது :- தேசிய கட்சிகளை எதிர்த்து தங்கள் கட்சி போட்டியிடுகிறது. கோவை மக்களின் நீண்டகால தேவைகளை இதுவரை பூர்த்தி செய்யாத, ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தேவைகளை நிறைவேற்றாதவர்களை எதிர்த்து போட்டியிடுகிறேன். இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தங்களது வேட்பாளருக்கு ஒரு ஸ்லிப் வழங்கப்பட்டது. அதில், வாக்கு எந்திரத்தில் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் சின்னங்கள் எப்படி இருக்கும் என்பது மாதிரி வழங்கப்பட்டது. மற்ற சின்னங்கள் தெளிவாக உள்ள நிலையில், விவசாயி சின்னம் கண்ணுக்கே தெரியவில்லை. 

இதேநிலை, தமிழ்நாடு முழுவதும் இருக்கும்பட்சத்தில் தங்களை தோற்கடிக்கும் விதமாக இருக்கிறது. சின்னம் தெளிவாக இருக்கும் வகையில் சரிசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இதுவரை வாக்கு இயந்திரங்களில் பதிய வேண்டியவை வந்து சேரவில்லை. கட்டாயம் இது சரி செய்யப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். சின்னம் சரிசெய்யப்படாவிட்டால் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...