வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க தயாரா..? : ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சவால்

கோவை : வன்னியர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்வதாகதாகவும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சவால் விடுத்தார்.


கோவை : வன்னியர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்வதாகதாகவும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சவால் விடுத்தார். 

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசியதாவது :-

கோவை 6 வயது சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய உள்ளது. வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். வன்னியர் சங்க அறக்கட்டளை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் தொடர்பாக ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வன்னியர் சங்கம் ராமதாஸ் உருவாக்கியது அல்ல. 3 இலட்சம் கோடி மதிப்புள்ள வன்னியர் சங்க சொத்துகள் ராமதாசிடம் இருக்கிறது. வன்னியர் மக்களின் ரத்தத்தையும், திசுக்களையும் உறிஞ்சி ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்கிறது. மேலும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா..?.

30 தொகுதிகளில் தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நோட்டோ, சீட்டோ தனக்கு தேவையில்லை. தமிழர் நலனே முக்கியம். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை மன்னித்து விடுதலை செய்வோம் என ராகுல்காந்தி அறிவிப்பார். தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து விட்டது. துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடத்தாதது ஏன்..?. எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் கை நீட்டி கவர் வாங்காத அரசியல்வாதி நான். 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அனுமதி வழங்கவில்லை. 

எனக்கு சிறை உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வினர் சமூக வலைதளங்களினால் கேவலமாக பேசுவதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்ட சிறை உணவு, சிகிச்சையில் மர்மம் இருக்கிறது, எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...