கோவை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என கோவையில் பிரச்சாரத்தின் போது அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என கோவையில் பிரச்சாரத்தின் போது அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

நீலகிரியில் நண்பகல் 12.30 மணியளவில் உதகையில் தனது பிரச்சரத்தை தொடங்கிய அவர், குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடவள்ளி, சாய்பாபாகாலனி, ராமநாதபுரம் மற்றும் சூலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில், நீலகிரி, கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தோல்வியடைந்துவிட்டது.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தலையிட்டு, சாட்சிகளை மாநில அரசு களைத்து விடுகிறது. குறிப்பாக, அண்மையில் நடந்த பொள்ளாச்சி விவகாரம் மற்றும் பன்னிமடை சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து வருகிறது. இதன்மூலம், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள ஏமாற்றி வருகின்றன. மேலும், முதலமைச்சர்கள உள்பட அமைச்சர்களும் மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள். ஏனெனில, மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஏற்கனவே, அதிருப்தி அலைகள் வீசத் தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இடைத்தேர்தலை ஒத்திவைக்க மாநில அரசு முயற்சிக்கிறது, என்றார்.