திருப்பூர் : கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் : கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வெள்ளியங்காட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, பண்பாட்டு கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர். நீதித்துறை, ஊடகம், வருமான வரித்துறை தேர்தல் ஆணையம், பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளும் வருமான வரித்துறையினர், ஏன் ஆளுங்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்வதில்லை..?. இந்தாட்சி காலத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனையாளர்கள் கல்புர்க்கி, தபேல்கார், கெளரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மீண்டும் மோடி ஆட்சியமைந்தால் அடுத்த முறை தேர்தல் நடப்பதே சந்தேகம், என தெரிவித்தார்.