கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அம்சஙகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அம்சஙகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.
17-வது மக்களவை தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பின் தலைவர் மவுலானா சையத் ஜலாலுதின் உமாரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறியதாவது :- நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தூய்மையான காற்று, குடிநீர், உணவு, ஆடை, வீடு, கல்வி, சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றை கிடைக்க வழி வகை செய்யப்படும்.
பெண்கள், ஏழைகள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட நலிவடைந்த தரப்பினர் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும். இஸ்லாமிய சட்ட திட்டங்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படும். ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், எனத் தெரிவித்தார்.