நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டி சோலைப் பகுதியில் 4-வது நாளாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை, அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டி சோலைப் பகுதியில் 4-வது நாளாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை, அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடை மாதங்களில் மழையின் அளவு குறைந்து, கடும் வெயில் சுட்டெரிக்கும். இச்சமயங்களில் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.

இந்த நிலையில், குன்னூர் அருகே வண்டிசோலை வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.

இதனை அணைக்க தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் பொதுமக்களும் இணைந்து சுமார் 40 பேர் கொண்ட குழுவாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.