கோவை : கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க அணி தாவி விடும் என மேட்டுப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை : கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க அணி தாவி விடும் என மேட்டுப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் நகர பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து, அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. மற்றும் சட்டமன்றத்தில் அவரது உருவப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., மெகா கூட்டணியல்ல. மானம் கெட்ட கூட்டணி.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. ராகுல் காந்தி தான், தங்களது பிரதமர் வேட்பாளர் என மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை தோற்கடித்தே தீருவோம் என கூறி தங்களது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அண்டை மாநிலமான கேரளாவில் கடுமையாக காங்கிரசை எதிர்க்கின்றன. இவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற போடும் நாடகம் எடுபடாது.
மேலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமையுமானால், தி.மு.க. அந்த அணிக்கு தாவி விடும். எனவே, பா.ஜ.க. மற்றும் எதிர்ப்பு வாக்குகள் தங்கள் கட்சிக்கு கிடைக்கும். ஏன் என்றால் நாங்கள் தான் மத்திய, மாநில அரசுகளை உறுதியாக எதிர்க்கின்றோம். எந்த காலத்திலும் பா.ஜ.க.,வுடன் ஒட்டோ, உறவோ இல்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளோம், என பேசினார்.