கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார் சுஜித் குமார்

கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருக்கும் சுஜித் குமார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுஜித் குமார் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்துள்ளார். அதே போல, இவரின் முயற்சியால் சாலை விதிகளை மீறுவோர் மீது பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் செய்ய போலீஸ் இ-ஐ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது. அந்தப் புகார்கள் மூலம் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக முக்கியத்துவம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் எனவும் கோவை மாவட்ட மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...