'நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

சென்னை : 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பிலான புத்தகத்தை சென்னையில் வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.


சென்னை : 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பிலான புத்தகத்தை சென்னையில் வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ரஃபேல் பேர ஊழல் நிகழ்ந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பா.ஜ.க.விற்கு எதிராக ஒன்று சேரும் எதிர்கட்சிகள் இந்த ரபேல் பேர ஊழல் குற்றச்சாட்டை ஆயுதமாக கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக, ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் ஒரு நூலை எழுதினார். சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று (ஏப்ரல் 2) மாலை 6 மணிக்கு இந்தப் புத்தகம் வெளியிடுவதாக இருந்தது. 

இந்த நிலையில், இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர். இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர். தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...