நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு, கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு, கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது :- மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை கடந்த மாதம் 14ஆம் தேதி சின்னம்மாவிடம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதில் கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவிப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுகிறது.

18 தொகுதிகளில் சட்டப்பேரவையில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்பாளர்களின் வீடுகளின் பணத்தை வைத்து, அதன் மூலம் வருமான வரித்துறை சோதனை மூலம் தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது. மதுரை ஆதீனம் யாருக்காக இப்படி செயல்படுகிறார் என்பதை விரைவில் கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்துதான் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். எதிர்க்கட்சிகள் செயல்படாமல் இருப்பதற்காக தான் ஒவ்வொரு வீடுகளிலும் ஆளுங்கட்சி தரப்பில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. ஆர்.கே. நகரில் வாக்கிற்கு ரூ. 6 ஆயிரம் வரை கொடுத்து விட்டு, அங்கு தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர், தற்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, உதகையில் டிடிவி தினகரன் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது :- நீலகிரியில் பல்நோக்கு மருத்துவமனை உருவாக்கப்படும். செக்ஷன் 17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். அம்மாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் அ.ம.மு.க.வில் உள்ளார்கள். தேர்தலுக்குப் பின் பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும், எனக் கூறினார்.