கோவை ராஜவீதியில் 1 கிலோ தங்கம் பறிமுதல் : வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை : கோவை ராஜவீதி அருகே உள்ள தேர்முட்டியில் 1 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : கோவை ராஜவீதி அருகே உள்ள தேர்முட்டியில் 1 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கணக்கில் வராத பணங்கள், தங்கங்கள் போன்ற பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில், 1 கிலோ அளவிலான தங்க நகைகள் இருப்பதை அடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.



மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கீர்த்திலால் காளிதாஸ் நகை கடைக்கு சொந்தமான நகை என தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுனர் வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

மேலும், 979 கிராம் நகைள் இருந்ததும், நகை செய்யும் இடத்தில் இருந்து நகைகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலர் தனபாலன் ஒப்படைத்தனர். அதன்பின்னர், வருமானவரி துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...