கோவையில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம் : ஸ்டாலின், அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வாக்குசேகரிப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கோவையில் இன்று பிரச்சாரம் செய்கின்றனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கோவையில் இன்று பிரச்சாரம் செய்கின்றனர்.

கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து, இன்று மாலை சிவனந்தா காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று, சி.பி.ஆருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

இதேபோல, அ.ம.மு.க.வின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்க உள்ளார். இதனிடையே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் முகாமிட்டு இருப்பதால், இன்று கோவை மாவட்டம் பரபரப்பாகவே காணப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...