கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து பிரச்சாரம் செய்வதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாமதமாக வந்ததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து பிரச்சாரம் செய்வதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாமதமாக வந்ததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரச்சாரம் செய்ய வருவதையொட்டி ஒலம்பஸ் பகுதியில் அக்கட்சியினர் குவிந்தனர். காலை 10 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கபட்ட நிலையில், காலை 9 மணி முதலே கட்சியினர் 80 அடி சாலையில் கூட துவங்கினர். இதனிடையே, மக்கள் கலைந்து செல்லக் கூடாது என்பதற்காக இதோ வருகிறார் வந்துவிட்டார் என ஒலி பெருக்கியில் அறிவித்து கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் இரு வழி பாதையில் அனுமதிக்கபட்ட வாகனங்களை ஒரு வழி பாதையில் போலீசார் அனுமதித்தனர்.
பின்னர் கட்சியினர் சாலையின் நடுவே சென்று நின்றதால் போக்குவரத்தை சரி செய்ய காவல் துறையினர் திணறினர். மேலும், சுங்கம் வழியாக வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. ஒலம்பஸ் பகுதியில் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்கு உள்ளாகினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தில் வந்திருந்தவர்கள், துணை முதலமைச்சர் எப்போது வருவார் என கேள்வி எழுப்ப தொடங்கினர். இதே இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என அவர்களை சமாதனம் செய்தனர்.