மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் கோவையில் நாளை முதல் 2 நாள் பிரச்சாரம்

கோவை : நீலகிரி மற்றும் கோவையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


கோவை : நீலகிரி மற்றும் கோவையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.45 மணிக்கு கோவை வரும் ஸ்டாலினுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர், இரவு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 



தொடர்ந்து, நாளை மறுதினம் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, கோவை கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...