நீலகிரி : மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேக்ஸி கேப் வாகனங்களின் ஓட்டுநர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேக்ஸி கேப் வாகனங்களின் ஓட்டுநர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா நகரமான உதகையில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க ஏதுவாக, சுற்றுலா வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இப்படியிருக்க, சுற்றுலா வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால், பல இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
"குறிப்பாக, நகரப்பகுதியில் வாகனங்களை இயக்கும் பொழுது குறிப்பிட்ட அளவிற்கு ஒரு முறை காவலர்கள் சோதனை செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படி வாகன சோதனை செய்யும் பொழுது சுற்றுலா செல்ல நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விடகுறைவான இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதனால். சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்கும் பொழுது, வாகனம் மீது ஏதாவது தவறு உள்ளதா..? என எண்ணுகின்றனர்," என்கின்றனர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.

மேலும், அவர்கள் கூறியதாவது :- ஒரு வாகனத்தில் 12 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் போலீசார், 18 இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் விடுத்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நடைமுறையை அமல்படுத்துமாறு எங்கள் சார்பாக நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சரியான ஆவணங்கள் நாங்கள் வைத்திருந்தும், ஒரு சில இடங்களில் எங்களுக்கு உண்டான அபராதத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, தங்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது, என சுற்றுலா வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, இன்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், வரும் 7-ம் தேதி வரை நடக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.